இலக்கியச்சோலை திங்களிதழ் மற்றும் ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘பிடிக்குள் அடங்கா மெளனம்’ சிறுகதை தொகுப்பு நூல் 24.04.2016 ஞாயிறன்று ஆரணியில் வெளியிடப்பட்டது.
கல்விக்கோ, டாக்டர் ஜி.விஸ்வநாதன் வெளியிட முதல் பிரதியை ஆரணி அரசினர் மகளிர் பள்ளி தலைமையாசிரியர் பி. சுடர்கொடியும் ஆன்மிகச் செம்மல் இரா. குமரேசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
நூல் குறித்து இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை. தமிழினியன் ஆவர்கள் தன் கருத்துக்களை முன் வைத்தது வந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது.
விஐடி வேந்தர் நூல் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். நூலாசிரியர் திருமதி பவித்ரா நந்தகுமார் ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.