Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Monday, August 5, 2013

ஆறடி நிலம்

மூணு பங்களா
நாலு வீடு
கொண்டிருந்த தங்கப்பனைக்
கூட இடுகாட்டு
ஆறடி நிலத்தில்
ஏழு பேருக்கு மேலே
எட்டாவதாகத்தான்
புதைத்தனர்
புல் முளைத்த
பழைய குழி பார்த்து
சில பல
மண்டை ஓடுகளின்
சாட்சியுடன்.

ஆறடி தான் உனக்கு
சொந்தம் என்ற
அப்பத்தாவின் வார்த்தையை
பொய்யாக்கி இருந்தது
122  கோடி
மக்கள்தொகை.
 நன்றி:தினமலர்-வாரமலர்             

4 comments:

  1. சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான [கவிதை] ஆக்கம்.

    மிகவும் ரஸித்த முத்திரை வரிகள்:

    //பழைய குழி பார்த்து சில பல மண்டை ஓடுகளின் சாட்சியுடன்.//

    //ஆறடி தான் உனக்கு சொந்தம் என்ற அப்பத்தாவின் வார்த்தையை பொய்யாக்கி இருந்தது 122 கோடி மக்கள்தொகை.//

    பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  2. தினமலர் வாரமலரில் கவிதை பிரசுரிக்கப்பட்டதற்கு, என் அன்பார்ந்த் இனிய நல்வாழ்த்துகள்.

    அறடி நிலம் என்ற தலைப்பும், தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள படமும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK
    valambal@gmail.com

    ReplyDelete
  3. என்னுடைய தளத்தில் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள ”ஆயிரம் நிலவே வா ! .... ஓர் ஆயிரம் நிலவே வா!!” + “அறுபதிலும் ஆசை வரும்” ஆகிய இரண்டு சிறப்புப்பதிவுகளுக்கும் தாங்கள் அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி பின்னூட்டமும் அளித்து, உற்சாகப் படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    Thanks a Lot ;)))))

    GOPU

    ReplyDelete