Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, February 4, 2011

கிராமிய சுற்றுலா




இந்தக் கோடையில் என் தங்கையின் ஊரான
ஊசூர் கிராமத்துக்கு நானும்,பெங்களூருவில்
வசிக்கும் என் அக்காவும் பிள்ளைகளோடு
சென்றிருந்தோம்.அந்தக் கிராமமும்,அதன்
பழக்க வழக்கங்களும் எங்கள் குட்டீஸ்களுக்கு
மறக்க முடியாத அனுபவங்களைப் பரிசளித்து
அனுப்பி வைத்துள்ளது!

ஆம்... நாற்று வளர்ந்து நெல்லாகி,
நெல்லிலிருந்து அரிசி கிடைப்பதை கதையாகப்
படித்திருந்த என் பத்து வயது மகள்,பச்சை
போர்த்திய வயல்வெளிகளில் அதை பிராக்டிகலாக
கண்கள் விரியப் பார்த்தாள்.மார்க்கெட்டில்
மட்டுமே காய்கறிகளைப் பார்த்த அவர்கள்,
தோப்பில் சுற்றிய போது,’ஐ...தக்காளி செடி’,
கறிவேப்பிலை செடி’,’பச்சை மிளகாய் செடி’,’
’மாமரம்’ என அங்கிருந்த செடிகளையும்,
மரங்களையும் பார்த்தும்,பறித்தும்,சுவைத்தும் அக
மகிழ்ந்தனர்.பாக்கெட் பாலை மட்டுமே அறிந்திருந்த
அவர்கள், என் தங்கை வீட்டிலிருந்த இரு
பசுமாடுகளின் காம்புகளிலிருந்து பால்காரர் பால்
கறந்ததை உலக அதிசயம் போல் மெய்மறந்து பார்த்தார்கள்.
எதிர்ன் வீட்டில் செய்த மண்பானைகளை இமைக்காமல்
பார்த்து ரசித்தார்கள்.

இயற்கையாக்க கிடைக்கும் பொருட்களையே
விளையாட்டுப் பொருட்களாக மாற்றி விளையாடும்
கெட்டிக்கார கிராமத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து
பனங்காயை நடைவண்டியாக்கியும்,தென்னை ஓலைக்
கீற்றில் பொம்மைகள் செய்தும்.களி மண்ணில் சட்டி
பானை செய்தும் அசத்தினர்.சாணத்தில் இருந்து
வரட்டி தட்டியதையும், தென்னை ஓலையில் இருந்து
விளக்கமாறு சீவியதையும் அவர்கள் படித்துக்
கொண்டிருக்கும் சயின்ஸ் பாடங்களை மீறிய
ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்!எல்லாவற்றையும்விட
அங்கிருந்த நட்களில் அவர்கள் டி.வி.யையே
மறந்து போனது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இனி,சமயம் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டோம் நானும் என்
அக்காவும்!

No comments:

Post a Comment