Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Monday, January 24, 2011

இலவசம் என்றால் அலட்சியமா




       சில மாதங்களுக்கு முன் எங்கள் தெருவிற்கு
வீடு வீடாக வந்து யானைக்கால் நோய்க்கு இரத்தப்
பரிசோதனை செய்தனர்.

    “ஐந்து நிமிடம் முன்பு தான் தெரு முனையில்
பார்த்தேன்.அதற்குள்ளாகவா இத்தனை வீடுகள்
முடித்து விட்டீர்கள்” என கேட்டேன்.

      “எங்கேம்மா,யாரும் பரிசோதனைக்கு
ஒத்துழைப்பு கொடுப்பதே இல்லை” என்று வருத்தத்துடன்
சொன்னார்.

       குழந்தைகள் எல்லாம் பயப்படுகிறார்கள்.முதலில்
கிளம்புங்கள் சார் என்கின்றனர்.இவர்கள் எல்லாம்
குழந்தைகளுக்கு சரியாக தடுப்பூசி கொடுக்கிறார்களா
என தெருயவில்லையே என சந்தேகித்தார்.இத்தனைக்கும்
இப்பகுதியில் யானைக்கால் நோயின் பாதிப்புக்குள்ளானோர்
பலர் இருக்கின்றனர்.6 மாதத்திற்கொருதரம் அரசு
கொடுக்கும் தடுப்பு மருந்துகளை உட்கொண்டால் கால்
வீக்கம் அறவே வராது.ஆனால்,பலர் இதை
அலட்சியப்படுத்தி எங்கள் கண் எதிரிலேயே தெரு
காவாயில் வீசுகின்றனர்.இலவசமாய் கொடுக்கும் எதற்கும்
மக்களின் அலட்சியப் போக்கை பாருங்கள் என
வருந்தியபடியே சொன்னார்.

      அவர் சொன்னது போல்,எங்கள் தெருவில்
வசிக்கும் பலரும் இரத்தம் பரிசோதிக்க ஆர்வம்
காட்டவேயில்லை.இலவசம் என்றாலே மக்களுக்கு
அலட்சியம் தானா?

No comments:

Post a Comment